மோடி ஒரு தீவிரவாதி போல செயல்படுகிறார்.. பயமாக இருக்கிறது.. விஜயசாந்தி சர்ச்சை பேச்சு!
பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி போல செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை விஜயசாந்தி பேசி உள்ளார்.
ஹைதராபாத்: பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி போல செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை விஜயசாந்தி பேசி உள்ளார்.
நேற்று ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
இதில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை விஜயசாந்தி பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இவரது பேச்சு தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உயர பறந்த தேமுதிக.. அதலபாதாளத்தில் தள்ளி விட்டாரே பிரேமலதா.. இளவரசி மகள் வருத்தம்
விஜயசாந்தி பேச்சு
விஜயசாந்தி தனது பேச்சில், இந்த தேர்தல் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையிலான போர்தான். போட்டி அவர்களுக்கு இடையில் மட்டும்தான். இந்த போரின் முடிவில் வெற்றிபெற போவது ராகுல் காந்திதான். தேர்தலுக்கு பின் அது தெரிய வரும்.
பாஜக ஏன்
நாம் தற்போது நாட்டின் ஜனநாயகத்திற்காக பாடுபடுகிறோம். இதை காக்க வேண்டுமே என்பதே நமது ஒரே குறிக்கோள். அதை செய்ய வேண்டும் என்றால், காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். பாஜக நமது நாட்டின் ஜனநாயகத்தை சீரழித்துவிட்டது.
பயம்
பிரதமர் மோடி மீது மக்கள் பயத்தில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி எப்போது, எங்கு குண்டு வீசுவார் என்று யாருக்கும் தெரியாது. அதனால் மக்கள் பெரிய அச்சத்தில் இருக்கிறார்கள். மக்களை எல்லோரும் பிரதமர் மோடி அச்சத்திலேயே வைத்து இருக்கிறார்.
மோடி தீவிரவாதி
பிரதமர் மோடி தீவிரவாதி போல செயல்படுகிறது. அவருக்கு மக்களை நேசிக்க தெரியவில்லை. ஒரு பிரதமர் மக்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி மக்களுக்கு நெருக்கமான நபராக இல்லை. அவர் மிகவும் அந்நியமானவர், என்று விஜயசாந்தி சர்ச்சையாக பேசி இருக்கிறார்.