ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கானாவில் 2 கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதல்.. 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி

Google Oneindia Tamil News

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 Seven people were killed when two cars collided in Telangana

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சாய் சேகர் இதுபற்றி கூறுகையில், நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட் என்ற இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின என்றார்.

தமிழ்நாட்டில் மேலும் 1,872 பேருக்கு கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு அதிகம்! தமிழ்நாட்டில் மேலும் 1,872 பேருக்கு கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு அதிகம்!

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுளளார். உடல்கள் அனைத்தும் காரின் இடிபாடுகளில் பயங்கரமாக சிக்கி உள்ளதால் அவற்றை மீட்கும் பணியில் போலீசாரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகிறார்கள்,

இறந்தவர்களில் சிலர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பபடுகிறது . மேலும் விவரங்கள் குறித்து உறுதி செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

English summary
Seven people were killed when two cars collided in Nagarkurnool district of Telangana on Friday, police said. The seven died on the spot, they said. One person, who was seriously injured, was taken to a nearby hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X