நான் வாய் திறந்தால் அவ்வளவுதான்.. சந்திரசேகர ராவ் அரசை மிரட்டும் ஸ்ரீரெட்டி #metoo
ஹைதராபாத்: தெலுங்கானா எம்எல்ஏ மீது பாலியல் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் தொடர்பான பாலியல் புகார்களை அள்ளி தெளித்து வந்தார். இவர் தினம்தோறும் யார் மீதாவது பாலியல் புகார்களை தனது பேஸ்புக்கில் பதிவிட்டு வந்ததால் திரையுலகமே அச்சத்தில் இருந்தது.
இந்த நிலையில் தற்போது தனது புகார்களை அரசியல்வாதிகள் பக்கம் திருப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜீவன் ரெட்டி மீது பேஸ்புக்கில் புகார் தெரிவித்துள்ளார்.
போதை பழக்கம்
அதில் அவர் கூறுகையில் அரசியல் சேவை செய்ய எம்எல்ஏ ஜீவன் ரெட்டி தகுதியானவர் இல்லை. பெண்களின் சதையை விரும்புபவர். அவருக்கு போதை பழக்கமும் உள்ளது.
[ரஜினி, கமலுக்கு பதிலடி.. விஜய்க்கு குறி வைக்கிறதா திமுக?.. அதிரடி திட்டம்! ]
பழிவாங்கும் நடவடிக்கை
இவர் மீது டிஆர்எஸ் அரசு விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். அதுபோல் என் மீது டிஆர்எஸ் அரசு எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஏற்படாது என நம்புகிறேன்.
பழி சுமத்தும்
என்னை எப்படி பாதுகாத்து கொள்வது என்பது எனக்கு தெரியும். அவர் என்னை கத்தியை காட்டி மிரட்டினார். நான் அரசியல் நாடகம் நடத்துகிறேன் என டிஆர்எஸ் அரசு என் மீது பழி சுமத்தும் என்பது எனக்கு தெரியும்.
பாலியல் புகார்
ஆனால் கடந்த சில மாதங்களாக நான் பாலியல் புகார்கள் குறித்து பேஸ்புக்கில் தெரிவித்து வருகிறேன். சந்திரசேகர ராவ் அவர்களே நான் வாய் திறந்தால் டிஆர்எஸ் அரசில் உள்ள பலரும் பாலியல் புகாரில் சிக்குவர் என்பதை நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.
சப்ளை செய்தவர்
டிஆர்எஸ் கட்சியையே நான் குற்றம்சாட்டவில்லை. எம்எல்ஏ ஜீவன் ரெட்டி பெண்களை மயக்குபவர். ஹோட்டலில் அவருக்கென நிரந்தர அறைகள் உள்ளன. அவரிடம் துப்பாக்கியும் உள்ளது. என் முன்னாலேயே அவர் போதை பொருளை உட்கொண்டுள்ளார். எம்எல்ஏ என்ற பதவியை தாண்டி முக்கிய புள்ளிகளுக்கு பெண்களை சப்ளை செய்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.