நெஞ்சை நொறுக்கும் வீடியோ.. குரங்கை தூக்கில் தொங்க விட்டு.. நாய்களுக்கு உணவாக்கி ரசித்த கொடூரன்!
குரங்கை தூக்கிலிட்டு ஒருவர் கொன்றுள்ளார்
ஹைதராபாத்: பெரிய தப்பை அந்த குரங்கு செய்துவிடவில்லை.. தாகத்துக்காக தண்ணீர் குடிக்க வந்தது.. ஆனால், அந்த குரங்கை பிடித்து, தூக்கில் தொங்க விட்டு கொன்று.. நாய்களுக்கு உணவாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது
நம் நாட்டை பொறுத்தவரை ஜீவகாருண்யம் மிக்க நாடு.. விலங்குகள் அட்டகாசமே செய்தாலும் சரி, உயிரையே பறித்தாலும் சரி, வெடி வைத்து கொல்வது என்பது வழக்கத்திலேயே கிடையாது.
முக்கியமாக சாப்பாட்டில் வெடியை வைத்து தருவது என்பது இதுவரை நடக்காத அதிர்ச்சி சம்பவம்.. நம் மக்கள் இவ்வளவு குரூரமாக இருந்ததும் கிடையாது என்றுதான் நாம் நம்பி கொண்டிருந்தோம்.. ஆனால் எல்லாமே தவிடுபொடியாகி வருகிறது.
ஆச்சு... ஆச்சு.. வருஷம்தான் ஆச்சு.. அழகிரி பஞ்சாயத்து ஓயவில்லையே.. ஆதங்கத்தில் கருணாநிதி குடும்பம்
பூனைக்குட்டி
பசுமாட்டுக்கு புல்லிலும், சினைமாட்டுக்கு கோதுமை தவிட்டிலும் வெடி வைத்ததை ஏற்கவே முடியவில்லை.. தமிழகத்தில் ஒரு இளைஞர் கடந்த மாதம் டிக்டாக்கில் லைக் வரவேண்டும் என்பதற்காக தான் ஆசையாக வீட்டில் வளர்த்து கொண்டிருந்த பூனைக்குட்டியை தூக்கில் தொங்க விட்டுள்ளார். இப்போதும் ஒரு கொடுமை தெலுங்கானாவில் நடந்துள்ளது.
கம்மம்
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் அம்மா பாளையம் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் வெங்கடேஸ்வர ராவ்.. இவர் வீட்டில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் இருப்பதை ஒரு குரங்கு பார்த்துவிட்டது. ஏற்கனவே நா வறண்டு, நீர் தேடி வந்த குரங்கு இந்த தண்ணீரை பார்த்ததும் குடிக்க வந்தது.. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த குரங்கு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தத்தளிக்க ஆரம்பித்தது.
தண்ணீர்
குரங்கு தத்தளிப்பதை வெங்கடேஸ்வரராவ் பார்த்துவிட்டார்.. தன் தண்ணீரை குடிக்க வந்துவிட்டதே என்ற ஆத்திரம் வந்தது.. அதனால், குரங்கை காப்பாற்றுவதற்கு பதிலாக, அதை வெளியே எடுத்து அடிக்க ஆரம்பித்தார்.. பிறகு தோட்டத்தில் இருந்த ஒரு மரக்கிளையில் அந்த குரங்கின் கழுத்தில் கயிறை மாட்டி தூக்கில் தொங்க விட்டுள்ளார்.
குரங்கு
குரங்கு தன் கால்களை உதறி துடிதுடித்து கொண்டிருந்தது.. பிறகு அப்படியே அந்த குரங்கை கயிறில் இருந்து எடுத்து, தன் நாய்களுக்கு வீசினார்.. அந்த நாய்களோ, முக்கால்பாகம் உயிர்போய் விட்டிருந்த அந்த குரங்கை கடித்து குதறின... இப்படி ஒரு சம்பவத்தை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது.. இந்த கொடூரத்தை என்ன வென்று சொல்வது?
நாய்கள்
குரங்கை நாய்கள் சாப்பிடுவதை அந்த பகுதியில் உள்ள மற்ற குரங்குகள் பார்த்து விட்டன.. எல்லா குரங்குகளும்அங்கு ஒன்றுசேர்ந்தன.. சக குரங்கின் சடலத்தை சுற்றி நின்று கொண்டன.. வேறு எந்த நாய்களும் சடலத்தை சாப்பிடாமல் சுற்றி வளைத்து அரணாக நின்றன.. வெங்கடேஸ்வராவ் குரங்கை கொல்வதை வீடியோ எடுத்துள்ளார்.. அந்த வீடியோவை பார்க்கவே பதறுகிறது.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகியும் வருகிறது.. இதையடுத்து, 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ
அந்த குரங்குகளுக்கு இருக்கும் புத்திகூட சில மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே.. வெங்கடேஸ்வரராவ் போன்றவர்களிடம் இருந்து மிருகங்களை காப்பாற்ற வேண்டிய அவசியத்தில் இந்த நாடு உள்ளது என்று மட்டும் புரிகிறது!