தெலங்கானாவில் தனி பெரும்பான்மையுடன் டிஆர்எஸ் ஆட்சி அமைக்கும்... ஓவைசி கணிப்பு
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானாவில் அடுத்து மீண்டும் ஆட்சி அமைக்க போவது, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) தான் என்று அனைத்திந்திய மஜ்லிஸ் இத்தேயாதுல் முஸ்லிம் இயக்கத்தின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவை நேரில் சந்தித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நாட்டின் முதன்மை மாநிலமாக தெலுங்கானாவை கொண்டு வருவதில் லட்சியமிக்கவர் சந்திரசேகரராவ் என்றும், அவர் தான் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் என்றும் கூறினார். சந்திரசேகரராவின் ஆட்சிக்கு இறைவன் துணை நிற்பார் என்றும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு ஓவைசியின் கட்சி ஆதரவளித்து பிரச்சாரம் மேற்கொண்டது. அதே நேரம் 7 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாகவே, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவை சந்தித்து ஹைதராபாத் தொகுதி எம்.பி.யான ஓவைசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.