ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலை.. 30 இடங்களில் வெற்றி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Recommended Video
ஹைதராபாத்: 2 தேர்தலிலுமே ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒய்எஸ்ஆர்சி 115 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியாகி வருகிறது.
இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இரு தேர்தல்களிலுமே முன்னிலை பெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 25 இடங்களில் 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்!
ஒய்எஸ்ஆர்சி முன்னிலை
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்தக்கட்சி இதுவரை ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
கருத்துக்கணிப்புகள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு ஆதரவாகவே வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்..!! இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..!!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதேபோல் சட்டசபை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 30 இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அப்படித்தான்.. தனித்துவமானவர்கள்.. அரசியல் பாடம் எடுத்த தமிழ்நாடு.. வியந்த வடஇந்தியர்கள்!
4ல் வெற்றி
தெலுங்கு தேசம் கட்சி 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்தக்கட்சி இதுவரை 4 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
முதல்வராகிறார் ஜெகன்
ஜன சேனா கட்சி ஒரு சட்டசபை தொகுதியில் முன்னிலையில் உள்ளது. ஆந்திர சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளதால் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!
30ல் பதவியேற்பு
வரும் 30ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்கிறார். அதேநேரத்தில் படுதோல்வியை சந்தித்துள்ள சந்திரபாபு நாயுடு நாளை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.