For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாக். அத்துமீறி தாக்குதல்- ஒரு வீரர் பலி

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

ஜம்மு: இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 1 soldier killed in ceasefire violation in J-K's Poonch

காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்னகாதி செக்டார் அருகே இன்று காலை சுமார் 7.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சிறிய ரக குண்டுகளால் மக்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர்.

அதேபோல், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுஷேரா பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி மோட்டார் குண்டுகளால் தாக்கினர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் இறந்துள்ளார். இதனால் ஜம்முவில் கூடுதல் பதற்றம் நிலவுகிறது.

English summary
1 soldier killed in ceasefire violation in Jammu and Kashmir's Poonch district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X