For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானம் மூலம் களமிறக்கப்பட்ட 10,000 இந்தியா வீரர்கள்.. காஷ்மீரில் பதற்றம்.. ஆளுநர் விளக்கம் என்ன?

காஷ்மீரில் இந்திய ராணுவ படையினர் 10000 பேர் குவிக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விமானம் மூலம் வந்த 10,000 வீரர்கள்... காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ படையினர் 10000 பேர் குவிக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் காஷ்மீரில் மிகவும் பதட்டமான சூழ்நிலையை நிலவி வருகிறது. தற்போது இந்திய ராணுவப்படை அங்கு தொடர்ந்து அதிக அளவில் எல்லை அருகே குவிக்கப்பட்டு வருகிறது.

    பல்வேறு படைகள்

    பல்வேறு படைகள்

    மொத்தம் 10000 வீரர்கள் தற்போது காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையால் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள். பாராமிலிட்டரி, சிஆர்பிஎப் உள்ளிட்ட பல்வேறு படை பிரிவுகளை சேர்ந்த 10000 வீரர்கள் அங்கு திடீரென்று கடந்த வெள்ளிக்கிழமை களமிறக்கப்பட்டனர். இவர்கள் எல்லோரும் விமானம் மூலம் அங்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    என்ன பதற்றம்

    என்ன பதற்றம்

    இப்படி காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்படுவதால் அங்கு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுவரை இந்த படைப்பிரிவை சேர்ந்தவர்கள் 130க்கும் அதிகமான காஷ்மீர் பிரிவினைவாதிகளை கைது செய்து இருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை இரவு மட்டுமே 100 பேர் வரை காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர்.

    விளக்கம்

    விளக்கம்

    இதனால் காஷ்மீரில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. இந்திய அரசுக்கு போருக்கு தயாராகிறதா என்ற கேள்விகள் எழுந்தது. ஆனால் காஷ்மீர் ஆளுநர் சத்யா பால் மாலிக் இதை மறுத்து உள்ளார். அதன்படி, இது சாதாரண பாதுகாப்பு நடவடிக்கைதான் என்று, தேர்தலின் போது எப்போதும் போல் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    கைது விளக்கம்

    கைது விளக்கம்

    தாக்குதல்கள் காரணமாக காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதேபோல் காஷ்மீரில் பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது வழக்கமான நடவடிக்கைத்தான். சமீபத்திய தாக்குதலை அடுத்துதான் தற்போது பிரிவினைவாதிகள் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றபடி இது தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம், என்று கூறியுள்ளார்.

    English summary
    10,000 troops deployed in Kashmir Border: Governor Malik explains the reason sudden security arrangements.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X