ஜார்க்கண்ட் வரலாற்றில் முதல்முறையாக.. சட்டசபைக்கு 10 பெண்கள் தேர்வு.. முதல்முறையாக 6 பேர் வெற்றி
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் வரலாற்றில் முதல்முறையாக தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 10 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 81 தொகுதிகளுக்கான தேர்தலில் நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலின் சிறப்பம்சமாக 10 பெண்கள் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 பெண் எம்எல்ஏக்கள் தேர்வாகியுள்ளனர். ஜேஎம்எம், பாஜக சார்பில் தலா 3 பெண்கள் எம்எல்ஏக்கள் தேர்வாகிவிட்டனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- சென்னை, மதுரை, சேலத்தில் இன்றும் போராட்டம்
இந்த 10 பெண்களில் முதல்முறையாக வெற்றி பெற்றவர்கள் 6 பேர் ஆவர். 2014-இல் 9 பெண்களும், 2009-ஆம் ஆண்டு தேர்தலில் 8 பெண்களும், 2005-ஆம் ஆண்டு தேர்தலில் 5 பெண்களும் இதுவரை வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றுள்ளார்.
ஆனால் ஒட்டுமொத்தமாக 10 பேர் சென்றது இதுவே முதல்முறை. இந்த தேர்தலில் மொத்தம் 127 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.