For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட் வரலாற்றில் முதல்முறையாக.. சட்டசபைக்கு 10 பெண்கள் தேர்வு.. முதல்முறையாக 6 பேர் வெற்றி

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 24-12-2019 | Morning News | oneindia tamil

    ராஞ்சி: ஜார்க்கண்ட் வரலாற்றில் முதல்முறையாக தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 10 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 81 தொகுதிகளுக்கான தேர்தலில் நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    10 Women MLAs are elected for Jharkhand Assembly for the first time

    இதில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலின் சிறப்பம்சமாக 10 பெண்கள் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 பெண் எம்எல்ஏக்கள் தேர்வாகியுள்ளனர். ஜேஎம்எம், பாஜக சார்பில் தலா 3 பெண்கள் எம்எல்ஏக்கள் தேர்வாகிவிட்டனர்.

    குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- சென்னை, மதுரை, சேலத்தில் இன்றும் போராட்டம்குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- சென்னை, மதுரை, சேலத்தில் இன்றும் போராட்டம்

    இந்த 10 பெண்களில் முதல்முறையாக வெற்றி பெற்றவர்கள் 6 பேர் ஆவர். 2014-இல் 9 பெண்களும், 2009-ஆம் ஆண்டு தேர்தலில் 8 பெண்களும், 2005-ஆம் ஆண்டு தேர்தலில் 5 பெண்களும் இதுவரை வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றுள்ளார்.

    ஆனால் ஒட்டுமொத்தமாக 10 பேர் சென்றது இதுவே முதல்முறை. இந்த தேர்தலில் மொத்தம் 127 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    English summary
    10 Women MLAs are elected for Jharkhand Assembly for the first time. Out of 10, 6 MLAs are first time winners.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X