For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்தீஸ்கர்:10 வயது சிறுமி பலாத்காரம்... தலையில் கல்லை போட்டு கொலை... இளைஞர் கைது

சத்தீஸ்கரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    உத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம் | மோடி கடும் கண்டனம்- வீடியோ

    ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் சென்றிருந்தார். அப்போது அங்கு மணமகனின் நண்பர் உத்தம் சாஹூ (25) என்பவரும் வந்திருந்தார்.

    10 years old girl raped and killed by head stone in Chattisgarh

    இந்நிலையில் திருமண ஊர்வலம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் 10 வயது சிறுமியை உத்தம் சாஹூ கடத்தி சென்றுவிட்டார். பிறகு அந்த கிராமத்தில் உள்ள வறண்ட ஆற்று பகுதியில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

    இதையடுத்து அந்த சிறுமியை ஈவு இரக்கமின்றி தலையில் கல்லை போட்டு நசுக்கி கொலை செய்துள்ளார். சிறுமியின் உடலை அங்கேயே புதைத்துவிட்டார்.

    இதனிடையே சிறுமியை காணாது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் உத்தம் சாஹூவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    English summary
    A 10 years old girl was sexually assaulted and killed during a wedding function in Chattisgarh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X