பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு- மத்திய அரசு அதிரடி
டெல்லி: பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அதிரடியாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய பொருளாதாரம் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இன்று அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. பாதுகாப்பு, விமான போக்குவரத்து துறையில் 100%; மருந்துகள் துறையில் 74% நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இது 2015-ம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் இதுவாகும். இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Today’s FDI reforms will give a boost to employment, job creation & benefit the economy. #TransformingIndia https://t.co/L49grGhku0
— Narendra Modi (@narendramodi) June 20, 2016
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் "இன்று பிரதமர் தலைமையில் நடந்த உயர்நிலைக் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவை நேரடி அன்னிய முதலீட்டுக்கான மிகப் பெரிய திறந்த பொருளாதார இடமாக மாற்றியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில், இந்த முடிவு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்; புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.