For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நக்சல்கள் திடீர் தாக்குதல்… 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலி.. சத்தீஷ்கரில் பயங்கரம்!!

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: நக்சல்களின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான சத்தீஷ்கர் சுக்மாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

சத்திஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதியாகும். அதிலும் புர்காபல் மற்றும் சின்டகுபா ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட இடங்களில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடமாகும்.

11 CRPF personnel matryred in naxal attack at Chattisgarh

இந்நிலையில், சுக்மா என்ற பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 74வது படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 26 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Eleven CRPF personnel have lost their lives in an encounter with naxalites in Chattisgarh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X