For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தானில் பாக்-ல் இருந்து இடம்பெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணம்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து ராஜஸ்தானில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்து குடும்பம் ஒன்று வசித்து வந்தது. பில் சமூகத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் அங்கு குத்தகை விவசாயம் செய்து வந்தனர்.

11 Pakistan migrants found dead in Rajasthan

இந்த நிலையில் இன்று காலை அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

11 பேர் உயிரிழந்த குடிசையில் மருந்து வாசனை அடிப்பதால் 11 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் மட்டும் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. சென்னையிலிருந்து நாளை அதிரடியாக இடமாற்றப்படுகிறது.. எங்கு செல்கிறது?740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. சென்னையிலிருந்து நாளை அதிரடியாக இடமாற்றப்படுகிறது.. எங்கு செல்கிறது?

அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்குப் பின்னரே அனைவரும் எப்படி உயிரிழந்தனர் என்பது தெரியவரும்.

English summary
Eleven members of a family of Pakistan Hindu migrants were found dead at a farm in Rajasthan Jodhpur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X