For Daily Alerts
Just In
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 13 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய தாக்குதலில் 13 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 உயர் அதிகாரிகள் உட்பட 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மாவோயிஸ்டுகள் இந்த ஆண்டு நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் சம்பவம் இது. கடந்த மாதம் சத்தீஸ்கரில் விமானப் படையினருக்கு பாதுகாப்பாக சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் விமானப் படை கமாண்டோ மற்றும் 6 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகாயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
13 soldiers of the Central Reserve Police Force or CRPF, including two officers, were killed in an ambush by Naxals in Chhattisgarh's Sukma district today, officials said.
Story first published: Monday, December 1, 2014, 18:17 [IST]