For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்: கம்பத் பகுதியில் மீண்டும் இரு சமூகங்களிடையே மோதல்- 13 பேர் படுகாயம்

Google Oneindia Tamil News

கம்பத்: குஜராத்தின் கம்பத் பகுதியில் மீண்டும் இரு சமூகங்களிடையே மோதல் வெடித்தது. இதில் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இச்சம்பவங்களில்13 பேர் படுகாயமடைந்தனர்.

Recommended Video

    செய்தி தெரியுமா | 24-02-2020 | Oneindia tamil Morning news

    குஜராத்தின் அனந்த் மாவட்டம் கம்பத் தாலுகா அக்பர்பூரில் கடந்த மாதம் இரு சமூகங்களிடையே திடீர் மோதல் வெடித்தது. அப்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வினு சாவ்தா என்பவர் பலியானார்.

    13 injured in communal clash at Khambhat, Gujarat

    இந்நிலையில் மீண்டும் நேற்று அக்பர்பூரில் இரு சமூகங்களிடையே மோதல் வெடித்தது. இருதரப்பும் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    பல இடங்களில் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இச்சம்பவங்களில் மொத்தம் 13 பேர் படுகாயமடைந்தனர். இம்மோதல்களில் ஈடுபட்டதாக 46 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே அகர்பூர் பகுதியில் இருதரப்பு மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதனால் இப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    13 people were injured as a clash broke out between two communities in Khambhat taluka of Gujarat Anand district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X