மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் திரும்பிய 137 யாத்ரீகர்களுக்கு கொரோனா
அமிர்தசரஸ்: மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் திரும்பிய 137 யாத்ரீகர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அம்மாநில அமைச்சர் ஓபி சோனி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் ஹஜ்புர் சாகிப் குருத்ரா வழிபாட்டுக்காக 3,500க்கும் மேற்பட்டோர் பஞ்சாப்பில் சென்று இருந்தனர். நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் இவர்கள் அனைவருமே மகாராஷ்டிராவிலேயே தங்கி இருந்தனர்.
இவர்களில் தற்போது பஞ்சாப் திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஓபி சோனி கூறுகையில், மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 139 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
பஞ்சாப்பில் கொரோனா தொற்று 600 ஐ தொட்ட நிலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே மகாராஷ்டிரா அரசு, ஹஸ்புர் சாகிப் குருத்வராவை மூடி சீல் வைத்திருக்கிறது.