50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பிக்கப் டிரக்.. பரிதாபமாக பறிபோன 14 உயிர்கள்!அதிகாலையில் சோகம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பிக்கப் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்திருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாபுராவின் மசுர்குக்ரி கிராமத்தில் இருந்து அம்ஹாய் தேவ்ரிக்கு நேற்று சிலர் பிக்கப் டிரக்கில் சென்றிருக்கின்றனர். அவர்கள், இன்று அதிகாலை சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். அப்போது சுமார் 1.30 மணியளவில் பட்ஜார் காட் எனும் பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டை மீறி, தடைகளை தாண்டி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

விபத்தையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "45-50 அடி பள்ளத்தில் பிக்கப் டிரக் கவிழ்ந்திருக்கிறது. விபத்து இரவு நேரத்தில் நடந்ததால், மீட்பு பணியில் சற்று பின்னடைவு இருந்தது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் உடல்கள் விடியற்காலைக்குள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
உயிரிழந்தவர்களில் ஆண்கள் 7 பேர், பெண்கள் 7 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. பிக்கப் டிரக் சாலையின் திருப்பத்தின்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்திருக்கிறது. விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
விபத்து நடந்த இடத்தை திண்டோரி மாவட்ட ஆட்சியர் விகாஸ் மிஸ்ரா, போலீஸ் சூப்பிரண்டு அகில் படேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டுள்ளனர். மாநிலத்தின் அமைச்சர்களும் மீட்பு பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டிருந்தனர். இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது x சோஷியல் மீடியா தளத்தில், "மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
நேற்று ஜார்க்கண்ட்டில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்த நிலையில், இன்று மற்றொரு விபத்தில் 14 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications