For Daily Alerts
Just In
மகாராஷ்டிராவில் என்கவுண்ட்டரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கட்ச்ரோலி: மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
கட்ச்ரோலி மாவட்டத்தின் எடபள்ளி போரியா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Comments
English summary
14 Maoists were killed in an encounter with police in Maharashtra's Gadchiroli district.
Story first published: Sunday, April 22, 2018, 15:14 [IST]