For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுக்காட்டில்.. 14 வயது சிறுமியை.. மயக்க நிலையிலேயே சீரழித்து.. கிணற்றில் வீசி கொன்ற 17 வயது சிறுவன்

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற 17 வயது சிறுவன் கைதாகி உள்ளான்

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் நடு காட்டுக்குள் பலாத்காரம் செய்துள்ளான்.. சிறுமியை கட்டையால் அடித்து மயங்கி விழ செய்து, அதன்பிறகு அந்த பிஞ்சை சீரழித்ததுடன், பாழும் கிணற்றிலும் தள்ளிவிட்டு போயுள்ளான்.. தற்போது அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பால்ராம்பூர் மாவட்டத்தில் சங்கர்நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கடந்த ஜுன் 24-ம் தேதி 14 வயதுடைய சிறுமி, தோழிகளுடன் கடைக்கு சென்றுள்ளார்.

 14 year old girl raped and murdered by 17 year old boy

அன்றைய தினம் சிறுமியின் அக்காவுக்கு வீட்டில் கல்யாணம்.. அதனால் உறவினர்கள் கூட்டம் வீடு முழுக்க இருந்ததால், சிறுமி கடைக்கு போனதை யாரும் கவனிக்கவில்லை.

அந்த நேரத்தில், அதே கிராமத்தை சார்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை காட்டு பகுதிக்கு வருமாறு கூப்பிட்டுள்ளான்.. தெரிந்த சிறுவன் என்பதால், அதை நம்பி பின்னாடியே சென்றாள் சிறுமி.. அந்த காட்டிற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான்.. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, கத்தி கூச்சலிடவும், சிறுவன் பயந்துவிட்டான்.. அதனால், பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து சிறுமியின் தலையில் ஓங்கி அடித்துவிட்டான்.

சிறுமி மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டாள்.. அசைவற்று கிடந்த சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.. லேசான மயக்கம் தெளிந்ததும், சிறுமி அந்த சிறுவனிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும், அவன் காதில் எதுவுமே ஏறவில்லை.. பின்னர், அந்த சிறுமியை இழுத்து கொண்டு போய், அங்கிருந்த கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டான்.

பயங்கர சத்தம்.. படாரென வெடித்த ரேடியோ.. குடல் சரிந்து.. 12 வயது சிறுமியும் பலி.. சேலம் சோகம்பயங்கர சத்தம்.. படாரென வெடித்த ரேடியோ.. குடல் சரிந்து.. 12 வயது சிறுமியும் பலி.. சேலம் சோகம்

மயக்க நிலையிலேயே சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டது.. இதனிடையே கல்யாண வீட்டில் சிறுமியை காணாது எல்லோரும் தேடி அலைந்தனர்.. இறுதியில் ஸ்டேஷனிலும் புகார் தந்தனர். அது சம்பந்தமாக விசாரிக்கும்போது, சிறுமியின் சடலம் தெரியவந்தது.. இதற்கே 2 நாள் ஆகிவிட்டது.

அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை தந்துள்ளது.

English summary
14 year old girl raped and murdered by 17 year old boy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X