For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தானேவில் திருமணத்திற்கு சென்ற இடத்தில் 14 வயது சிறுமி பலாத்காரம்

By Siva
Google Oneindia Tamil News

தானே: தானேவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் 14 வயது பழங்குடியினத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பொம்பே பதா கிராமத்தை சேர்ந்த 14 வயது பழங்குடியினத்து சிறுமி சொன்டாக்கே கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 18ம் தேதி அங்கு சென்றுள்ளார்.

14-year old girl raped at marriage function

திருமணம் முடிந்த பிறகு அவர் மண்டபத்தில் உள்ள அறை ஒன்றில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது மயுர் முக்னே(19) என்பவர் சிறுமியை எழுப்பி அங்கிருந்து வம்படியாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என மயுரின் நண்பர்கள் ஹரிஷ் பாம்பே, உதய் பாம்பே ஆகியோர் சிறுமியை மிரட்டியுள்ளனர்.

முதலில் இது குறித்து யாரிடமும் கூறாத சிறுமி மறுநாள் காலை துணிவை வரவழைத்துக் கொண்டு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மயுர் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

அந்த 3 பேரும் சிறுமியின் கிராமத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
A 14-year old girl was sexually assaulted by a teenager while she went to a village to attend a wedding in Thane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X