தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான பரபரப்பான சிசிடிவி வீடியோ வெளியீடு
தூத்துக்குடியில் 5 நாட்களாக நீடித்து வந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நிவாரண நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி பலியானவர்களுக்கு ரூ.20 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1.5 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படுகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர்.
இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அந்த தடையை மீறி பொதுமக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றபோது அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மட்டும் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பியதால் 144 தடை உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.