For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புற்றுநோயை வென்ற 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம், அந்த வழியாக சென்றவரால் மீண்டும் சீரழிப்பு

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் புற்றுநோயுடன் போராடி வென்ற 15 வயது சிறுமி 2 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியை அந்த வழியாக சென்ற நபரும் சீரழித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சரோஜினி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி புற்றுநோயுடன் போராடி வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் மளிகை கடைக்கு சென்றுள்ளார்.

15-year-old cancer survivor gang-raped, raped again by passerby in UP

அங்கு வந்த சுபம் என்ற வாலிபர் சிறுமியிடம் நைசாக பேசி அவருடன் அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரும் அவரது நண்பர் சுமித் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துளவிட்டு தப்பியோடிவிட்டடனர்.

இதையடுத்து சிறுமி அந்த வழியாக சென்ற வீரேந்திரா என்பவரிடம் வீட்டிற்கு செல்ல உதவி கேட்க அவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் ஒருவழியாக வீடு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறினார்.

அவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுமித் மற்றும் வீரேந்திராவை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சுபமை தேடி வருகின்றனர்.

English summary
A 15-year-old cancer survivor was gang-raped by two youths in Lucknow on friday night. The girl was raped again by a passerby whom she asked for help to reach home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X