For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடுமை.. நிர்வாணமாக தெருக்களில் ஓடிய 15 வயது சிறுமி.. 3 காமுகர்களிடம் சிக்கி சீரழிந்த பரிதாபம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்வாணமாக ஓடிய 15 வயது சிறுமி.. 3 காமுகர்களிடம் சீரழிந்த பரிதாபம்!-வீடியோ

    ஜெய்ப்பூர்: 3 காமுகர்களிடம் சிக்கி சீரழிந்த 15 வயது சிறுமி ஒருத்தி... அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தெரு தெருவாக, நிர்வாணமாக ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது! ராஜஸ்தானின் பில்வாராவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    15 வயது சிறுமி ஒருத்தி, தன்னுடைய உறவினர், நண்பருடன் பக்கத்தில் உள்ள கோயிலுக்கு சென்றிருக்கிறாள். அப்போது 3 இளைஞர்கள், ராஜு கஹார், கைலாஷ் கஹார் மற்றும் நாராயன் குர்ஜார் ஆகியோர் வழியிலேயே உட்கார்ந்து தண்ணி அடித்து கொண்டுள்ளனர்.

    இவர்களை பார்த்ததும், வழிமறித்து இளைஞர்கள், நண்பர், உறவினரை மிரட்டி தாக்கி உள்ளனர். அதனால் அவர்கள் 2 பேரும் தப்பித்து ஓடிவிட்டனர். ஆனால் 15 வயது பெண் மட்டும் சிக்கி கொண்டாள். அவளை 3 பேரும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு கடத்தி சென்று, மாறி மாறி நாசம் செய்திருக்கிறார்கள்.

    காமுகர்கள்

    காமுகர்கள்

    தப்பித்து ஓடிய 2 பெண்களில் ஒருத்தி, அங்கிருந்த ஒரு மார்க்கெட்டுக்குள் ஓடிச்சென்று உதவி கேட்டிருக்கிறாள். ஆனால் ஒருத்தருமே உதவ முன்வரவில்லை. ஒரே ஒருவர் மட்டும் விஷயத்தை கேள்விப்பட்டு பதறிய ஒருவர், சிறுமி கடத்தப்பட்ட இடத்துக்கு வந்தார். புதிதாக வந்த ஆளை பார்த்ததும், காமுகர்கள் 3 பேரும் தப்பியோடி விட்டனர்.

    நிர்வாண கோலம்

    நிர்வாண கோலம்

    ஆனால் அந்த நபரை பார்த்த சிறுமியோ, அவர் காப்பாற்ற வந்தவர் என்று தெரியாமல், 4-வதாக தம்மை சீரழிக்க வந்தவர் போலும் என்று நினைத்து கொண்டு நிர்வாண கோலத்துடனேயே ஓட ஆரம்பித்துள்ளார். இப்படியே பயந்து கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நிர்வாணமாகவே ஓடியிருக்கிறார்.

    ஒப்படைப்பு

    ஒப்படைப்பு

    ஆனால் பின்னாடியே துரத்தி வந்த அந்த நபரோ, "பயப்படாதேம்மா.. நான் உன்னை காப்பாத்த தான் வந்தேன்.. நில்லு" என்று சொல்லி இருக்கிறார். அந்த நபரிடம் தன்னுடைய துணி இருப்பதை பார்த்ததும்தான், காப்பாற்ற வந்தவர் என்பதை அறிந்து ஒரு இடத்தில் நின்றிருக்கிறாள் சிறுமி. அதன்பிறகு அந்த நபர், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு வந்து பில்வாரா போலீசாரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    இதை பற்றி பில்வாரா போலீஸார் சொல்லும்போது, 3 பேரும், கோயிலுக்கு போகும்போது, 3 இளைஞர்களும் மது அருந்தி கொண்டிருந்தனர் என்றும், 3 பேரில் 15வயது சிறுமி மட்டும் சிக்கி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்கிறார்கள். மேலும், இது சம்பந்தமான வழக்கையும் பதிவு செய்து, விசாரித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    English summary
    15 year old minor girl raped and ran naked till her rescue in the Rajasthan Streets by 3 people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X