நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானப்படை விமானங்கள்.. உ.பி.யில் அசத்தல்
லக்னோ: இந்திய விமானப்படையை சேர்ந்த 16 விமானங்கள், லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டு பயிற்சி எடுக்கப்பட்டன.
இந்திய விமானப்படையை சேர்ந்த சி-130j வகை ஹெர்குலஸ் 35000 கிலோ வடிவிலான இந்த விமானங்கள் லக்னோ-ஆக்ரா நடுவேயான எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையில் தரையிறக்கப்படுகின்றன.
போர் போன்ற சூழ்நிலைகளின்போது அவசரத்திற்கு நெடுஞ்சாலைகளை, ரன்-வேயாக பயன்படுத்த வேண்டிய நிலை வரும். அதற்காகவே இந்த ஒத்திகை நடைபெறுகிறது.
மொத்தம் 16 விமானங்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இந்த வகை விமானங்கள் ஒவ்வொன்றும் ரூ.900 கோடி மதிப்புள்ளவை. விமான படையில் 2010ல் இணைக்கப்பட்டவை. ஒவ்வொரு விமானத்திலும் 200 கமாண்டோக்கள் பயணிக்க முடியும்.
3 மணி நேரம் இந்த பயிற்சி நடைபெற்அறது. லக்னோவிலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் இந்த பயிற்சி எடுக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹெர்குலஸ் வகை விமானங்கள் நெடுஞ்சாலையில் தரையிறக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.
2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் சிறிய ரக விவமானங்களை கொண்டு இந்திய விமானப்படை இதுபோன்ற சாகசங்களை வெற்றிகரமாக செய்து பயிற்சி எடுத்துள்ளது.