உ.பி. கோரக்பூரில் தொடரும் சோகம்- மேலும் 16 குழந்தைகள் பலி
உ.பி. கோரக்பூர் மருத்துவமனையில் மேலும் 16 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
கோரக்பூர்: உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 16 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் தொடரும் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் 1470 பேர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 310 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 63 குழந்தைகள் கொத்து கொத்தாக மரணித்துப் போனதையடுத்தே இந்த உயிரிழப்புகள் வெளியே தெரியவந்தது.
போதுமான ஆக்சிஜன் சப்ளை செய்யாததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என கூறி 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 16 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மருத்துவர்களோ கவலைக்கிடமான நிலையில் குழந்தைகள் கொண்டுவரப்பட்டதாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டன என விளக்கம் தந்துள்ளனர்.