For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூக்கில் தொங்கிய 16 வயது காஸியாபாத் நீச்சல் வீராங்கனை

Google Oneindia Tamil News

காஸியாபாத்: உ.பி. மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த 16 வயதேயான நீச்சல் வீராங்கனை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட வீராங்கனையின் பெயர் சாய்ரா சிரோஹி. கடந்த மாதம் நடந்த சிபிஎஸ்இ தேசிய சாம்பியன் போட்டியில் இவர் 3 தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.

16-yr-old Ghaziabad swimmer found hanging

காஸியாபாத்தின் கோவிந்த்புரம் பகுதியில் உள்ள இவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் சாய்ரா. தனது துப்பட்டாவால் இவர் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனையில் தூக்குப் போட்டதால்தான் மரணம் சம்பவித்ததாகவும், உடலில் வேறு காயம் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சாய்ராவின் தந்தை ஜெய்தீப் போலீஸில் வேலை பார்த்து வந்தவர். தனது மகளுக்குத் துணையாக போக வேண்டும் என்பதற்காக விருப்ப ஓய்வு பெற்று மகளின் நீச்சல் கனவுக்குத் துணையாக இரு்நது வந்தார்.

இந்த இளம் சாம்பியனின் தற்கொலைக்கான காரணம் குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
16-yr-old Ghaziabad swimmer Saira Sirohi was found hanging in her house. The reason for her decision not known.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X