ரேவரியில் மீண்டும் பயங்கரம்: 17 வயது சிறுமியை சீரழித்த 19 வயது வாலிபர்
Recommended Video
ரேவரி: ரேவரியில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தன்னுடன் பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான 19 வயது வாலிபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த நபர் தன்னை அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை நேற்று கைது செய்துள்ளனர்.
ரேவரியில் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மாணவியாக வந்தவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்களில் சிறுமி ஒருவரும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர ஹிந்த் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளார். 2 ஆண்கள் தன்னை சீரழித்துவிட்டதாக அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
பெண்களை பாதுகாக்க தவறிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.