2 வயது குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை.. குற்றவாளிகள் சிக்கினர்
போபால்: மத்திய பிரதேசத்தில் 2 வயது குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கடந்த செப்டம்பர் 17ம் தேதி போலீசில் புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகாரில் நேற்று இரவில் இருந்து எனது 2வது குழந்தையை காணவில்லை என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், செப்டம்பர் 18 அன்று விவசாய நிலத்தின் ஒரு சுவர் ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமியை கடத்தி சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை கண்டுபிடித்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைத்த போலீசார், குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.20000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தனர். இது நல்ல பலனை கொடுத்தது. குற்றவாளிகள் போலீசிடம் நேற்று சிக்சினர்.
தலையை கல்லால் தாக்கி, முகத்தை கொடூரமாக சிதைத்து உ.பி.யில் மற்றொறு சிறுமி படுகொலை
சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சோனு தாக்கூர் என்ற சோனு கோண்ட் (21), சுபம் மல்லா (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது
ஐபிசி பிரிவு 376 (பலாத்காரம்), 363 (கடத்தல்), 302 (கொலை), 201 (சான்றுகள் காணாமல் போதல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி எஸ்.பாகுனா தெரிவித்தார்.