4ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை பலாத்காரம் செய்த ஆசிரியர்.. கொல்கத்தாவில் கொடூரம்
கொல்கத்தாவில் இரண்டு நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளை, அவர்களின் வகுப்பு ஆசிரியர் பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார்.
கொல்கத்தா: கொல்கத்தாவில் இரண்டு நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளை, அவர்களை வகுப்பு ஆசிரியர் பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார்.
நான்கு நாட்கள் பள்ளி அறையில், பள்ளி நேரம் முடிந்த பின் இந்த கொடுமையை செய்து இருக்கிறார். போலீஸ் தற்போது இவரை கைது செய்து இருக்கிறது.
இதில் ஒரு சிறுமியை அவர் அடித்து கொடுமை படுத்தியதும் வெளியே தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி செல்லவில்லை
அந்த இரண்டு சிறுமிகளும், கடந்த சில நாட்களாக பள்ளி செல்ல முடியாது என்று கூறி அழுது இருக்கிறார்கள். ஏன் என்று காரணம் கேட்டதற்கு கூறாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு சிறுமி மட்டும், ஆசிரியர், பாலியல் வன்புணர்வு செய்ததை பெற்றோரிடம் சொல்லி உள்ளார். இவர்கள் இருவரும் 4ம் வகுப்பு மாணவிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமாக துன்புறுத்தல்
அதோடு அந்த மாணவிகளை, அந்த 35 வயது ஆசிரியர் அடித்தும் துன்புறுத்தியுள்ளார். தினமும் பள்ளி முடிந்த பின் மாணவிகளை அழைத்து, ஆசிரியர் அறையில் வைத்து நான்கு நாட்கள் வன்புணர்வு செய்துள்ளார்.இதில் வேறு எந்த ஆசிரியருக்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதில் ஒரு சிறுமி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
தற்போது இந்த இரண்டு சிறுமிகளும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த ஆசிரியருக்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரிதானதை அடுத்து, பெற்றோரார்கள் எல்லோரும் சேர்ந்து அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். நேற்று இரவு தொடங்கிய போராட்டம் இன்று காலை வரை நடந்தது.
சமீப நாட்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து இருக்கிறது. தற்போது 12 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிராக மரணதண்டனை வழங்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் தான் தற்போது அந்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தொடர் சம்பவம்
சமீப நாட்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து இருக்கிறது. தற்போது 12 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிராக மரணதண்டனை வழங்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் தான் தற்போது அந்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.