நீட் ஆள்மாறாட்டம்... கேரளாவை சேர்ந்த 2 மாணவர்கள் கைது- 2 இடைத்தரகர்கள் தப்பி ஓட்டம்
சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பிரவீன், ராகுல் ஆகிய 2 மாணவர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். மேலும் கேரளாவை சேர்ந்த 2 இடைத்தரர்கள் போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவாகிவிட்டனர்.
நீட் ஆள் மாறாட்டம் விவகாரம் மிகப் பெரிய விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இவ்வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் ஆள் மாறாட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த பிரவீன், ராகுல் ஆகிய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்தவர் பிரவீன். பாலாஜி மருத்துவ கல்லூரியில் படித்தவர் ராகுல்.
இதனிடையே கேரளா இடைத்தரகர்களான ரஷீத், ரஃபி இருவரையும் சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்களில் ரஷீத் பெங்களூருக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. ரஃபி வட இந்தியாவுக்கு தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.