For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.. பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

Google Oneindia Tamil News

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீரின் சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் பதுங்கியிருப்பதாக கூறப்பட்ட பகுதியான ஹிந்த் சீதாபோராவை, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

2 militants shot dead by security forces in Jammu and Kashmi.. weapons Seized

பாதுகாப்பு படையினர் தங்களை தேடுவதை அறிந்த தீவிரவாதிகள், அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கும் விதமாக திருப்பி துப்பாக்கியால் சுட்டு தாக்கினர்.

தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

என்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா? வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! என்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா? வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடும் நடப்பதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

English summary
2 militants killed by security forces in Jammu and Kashmir.Deadliest weapons and explosives have been confiscated from the dead terrorists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X