For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீட்டு கிடைக்காததால் விரக்தி! கட்சி மாறும் வடகிழக்கு தலைவர்கள்! பாஜக தலைமை கடும் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    சீட்டு கிடைக்காததால் கட்சி மாறும் பாஜக தலைவர்கள்

    இடா நகர்: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படாத விரக்தியில் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், 6 எல்எல்ஏக்கள் உள்பட 25 பேர் என்பிபி கட்சியில் இணைந்தனர்.

    2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்த பின்னர் வடகிழக்கு மாநிலங்களை ஒவ்வொன்றாக பாஜக கைப்பற்றியது. அஸ்ஸாம், திரிபுரா, அருணாசல பிரதேசம் என பல வடகிழக்கு மாநிலங்களை வாரி சுருட்டியது.

    இந்நிலையில் தற்போது அருணாசல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியால் பாஜக தலைவர்கள் பலர் மேகாலயா மாநில முதல்வர் சங்மாவின் என்பிபி கட்சியில் இணைந்துள்ளனர்.

    இந்துக்கள் எல்லாம் எதிரிகள்... சட்டமன்றத்தில் பாக். எம்எல்ஏ ஆவேச பேச்சு இந்துக்கள் எல்லாம் எதிரிகள்... சட்டமன்றத்தில் பாக். எம்எல்ஏ ஆவேச பேச்சு

    தேர்தல் அறிவிப்பு

    தேர்தல் அறிவிப்பு

    அருணாசல பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 11ம் தேதி சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஒன்றாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருணாசல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    வேட்பாளர் பட்டியல்

    வேட்பாளர் பட்டியல்

    இதையடுத்து பாஜக நாடாளுமன்ற குழு தலைமை கடந்த ஞாயிற்றுக்கிழமை மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 54 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலை பார்த்து பாஜக நிர்வாகிகள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

    தலைவர்கள் அதிருப்தி

    தலைவர்கள் அதிருப்தி

    அருணாசல பிரதேசத்தின் பாஜக மாநில செயலாளர் ஜர்பூம் கம்லின், அம்மாநில உள்துறை அமைச்சர் குமார் வெய், மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜார்கர் கம்லின் ஆகியோருக்கு சீட் கிடைக்கவில்லை. இதேபோல் சில எம்எல்ஏக்களுக்கும் சீட் கிடைக்கவில்லை.

    கட்சி மாறிய நிர்வாகிகள்

    கட்சி மாறிய நிர்வாகிகள்

    இதையடுத்து சீட் கிடைக்காத 2 பாஜக அமைச்சர்கள் உள்பட 8 எம்எல்ஏக்கள் மற்றும் 19 தலைவர்கள் மேகலாயா முதல்வர் சங்கமாவின் என்பிபி கட்சியில் இணைந்தனர். இதேபோல் அருணாசல மக்கள் கட்சி தலைவர்களும் என்பிபி கட்சியில் இணைந்தனர். இதனால் பாஜக தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

    என்பிபி வேட்பாளர்கள்

    என்பிபி வேட்பாளர்கள்

    இதனிடையே என்பிபி கட்சியின் பொதுச்செயலாளர் தாமஸ் சங்மா செய்தியாளர்களிடம் கூறும் போது, "அருணாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிட உள்ளது. வரும் புதன்கிழமை வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளோம்" என்றார். இதனிடையே என்பிபி செய்தி தொடர்பாளர் முட்சு மிதி கூறுகையில், தேவைப்பட்டால் எங்கள் கட்சி அருணாச்சல பிரதேசத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றார்.

    English summary
    Two ministers and six MLAs in from BJP Arunachal Pradesh have joined the National Peoples’ Party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X