அடப்பாவிகளா.. இப்படியுமா பண்ணுவீங்க.. உடம்பு பூரா செல்லோடேப் போட்டு ஒட்டி.. மது பாட்டில்கள் கடத்தல்!
அமராவதி: தெலுங்கானாவிலிருந்து ஆந்திராவுக்கு மது கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர். உடம்பு முழுவதும் மதுபாட்டில்களை செல்லோடேப் கொண்டு ஒட்டி மதுவை கடத்தினர்.
போலவரம் கிராமத்தில் கலால் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தெலுங்கானா எல்லையிலிருந்து இருவர் இருசக்கர வாகனத்தில் அதிகாலை 5 மணிக்கு வந்தனர்.
அவர்களது நடமாட்டம் போலீஸாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. மேலும் அவர்களது உடல் வாகுவும் ஏதோ சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தது. இதனால் அவர்கள் இருவரையும் போலீஸார் மடக்கி பிடித்தனர்.
அப்போது இருவரும் தங்கள் மார்புகளில் 101 மது பாட்டில்களை வைத்து செல்லோ டேப் கொண்டு சுற்றி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை தெலுங்கானாவிலிருந்து ஆந்திராவுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.
ராமநாதபுரம் இளைஞர் படுகொலை.. மதப் பிரச்சினை காரணம் அல்ல.. ராமநாதபுரம் காவல்துறை விளக்கம்
விசாரணையில் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அஸ்வராவ்பேடாவை சேர்ந்தவர் தேவரகொண்டா ராஜேஷ், தேவரகொண்டா ஸ்ரீனிவாஸ் ராவ் என தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களும் இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.