For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. இந்திய ராணுவம் அதிரடி!

By Karthikeyan
Google Oneindia Tamil News

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற இந்திய நிலைகள் மீது தாக்குதல்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

2 Terrorists Killed In Jammu And Kashmir

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மச்சில் செக்டர் பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது நடந்த பயங்கர சண்டையில் 4 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து சில துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால் அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

English summary
two terrorists who were trying to cross over into Kashmir were killed by security forces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X