ரூ8 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு
- நகர்ப் பகுதிகளில் பொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்க உழவர் சந்தை மாடலில் திட்டம்
-தேசிய அளவில் வேளாண் சந்தைகள் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி துவங்கப்படும்
-சென்னை-பெங்களூர் தொழில் காரிடார் வழித்தடத்தில் ஆந்திராவின் கிருஷ்ணபட்டினம் துறைமுகமும் சேர்ப்பு
-குறுகிய கால ஊரக மறுகடன் திட்டத்துக்கு ரூ. 5000 கோடி
-கிராமப் பகுதிகளில் குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க ரூ. 5000 கோடி
-அசாம், ஜார்க்கண்ட்டில் புதிய வேளாண் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்
-ரூ8 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு
-விவசாயத்தில் 4% வளர்ச்சியை எட்ட இலக்கு
-பிரேக்குக்குப் பின் உட்கார்ந்து கொண்டு பட்ஜெட் படிக்கும் அருண் ஜேட்லி
-அருண் ஜேட்லிக்கு உடல் நலமில்லையோ?
5 நிமிட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் பட்ஜெட்டை அமர்ந்தபடி வாசித்தார் ஜேட்லி
-மதரஸாக்கள் மேம்பாட்டுக்கு ரூ. 100 கோடி
-அகமதாபாத் நகரிலும் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும்
-பட்ஜெட்டுக்கு இடையே 5 நிமிட பிரேக் எடுத்தார் அருண் ஜேட்லி
-ஆனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு பட்ஜெட்டில் ரூ. 100 கோடி மட்டுமே ஒதுக்கீடு
-20 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகர்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள்
-லக்னெள நகருக்கு மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்படும்
-அனைத்து கிராமங்களிலும் பிராட்பேண்ட் இன்டர்நெட் வசதி உருவாக்கப்படும்
-ஜம்மு,சத்தீஸ்கர்,கோவா,ஆந்திரா,கேரளாவில் புதிய ஐஐடி-கள் அமைக்கப்படும்
-தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்துக்கு ரூ3,600 கோடி ஒதுக்கீடு
-அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை
-சென்னை மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம், காசநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்
-கிராம சாலைகள் அமைக்க ரூ. 14,389 கோடி கிஸான் விகாஸ் பத்திரங்கள்
-மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி எவ்வளவு- ஜேட்லி சொல்லவில்லை
-தேசிய வீட்டு வசதி வங்கித் திட்டத்துக்கு ரூ. 8,000 கோடி ஒதுக்கீடு
-மேலும் புதிய 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க திட்டம் என அறிவுப்பு
-ஆனால் இதற்கு ஜேட்லி நிதி ஒதுக்கவில்லை