உங்க மகளை நான் பாத்துக்கறேன்.. கவலைப்படாதீங்க.. என் மகளை நீங்க பாத்துக்கங்க.. உருக வைத்த தாய்மை!
காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கூடுதல் கவனம் செலுத்த இரு பெண்கள் தங்கள் குழந்தைகளை மாற்றிக் கொண்டு பராமரித்து வருகிறார்கள்.
சிக்கிமில் ஒரு பெண்ணுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனால் அவரது 27 மாத குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது.
அது போல் 6 வயது குழந்தையின் தாய்க்கு கொரோனா வைரஸ் உறுதியானது. ஆனால் அந்த குழந்தைக்கு கொரோனா இல்லை. இதையடுத்து 27 மாத குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த குழந்தையை கொரோனா பாதித்த இன்னொரு குழந்தையின் தாய் பார்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால் 6 வயது குழந்தையின் தாய் முதல் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து என்ன செய்வது என யோசித்த மருத்துவர்கள் கொரோனா பாதிக்காத 6 வயது குழந்தையை 27 மாத குழந்தையின் தாய் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர். அது போல் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ள 6 வயது குழந்தையை இன்னொரு பெண் பார்த்துக் கொள்கிறார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா மறுமணம்.. டிஒய்எஃப்ஐ தலைவர் முகமது ரியாசை மணந்தார்
கொரோனாவிலிருந்து மீண்டு வர இருவரும் தங்களை குழந்தைகளை மாற்றிக் கொண்ட உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. சிக்கிமில் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.