முட்டை வாங்க போன 13 வயது சிறுமி.. கடத்தி சீரழித்த 16 வயது சிறுவன்.. இப்போ 20 வருஷ ஜெயில்!
13 வயது சிறுமியை சீரழித்த 17 வயது சிறுவனுக்கு 20 வருட ஜெயில் கிடைத்துள்ளது
ராஞ்சி: 13 வயசு சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததில், 17 வயசு சிறுவனுக்கு 20 வருஷ ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகா பகுதியை சேர்ந்த 13 வயசு சிறுமி, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி முட்டை வாங்க கடைக்கு போனார்.
அப்போது, பைக்கில் 16 வயசு சிறுவன் ஒருவன், அந்த சிறுமியை பக்கத்தில் இருந்த அணைப்பகுதிக்கு கடத்தி சென்று விட்டான். அது மட்டுமில்லை, அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரமும் செய்தான்.
இந்த சம்பவம் அந்த மாநிலம் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்பந்தமான வழக்கு சிம்தேகாவில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி நீரஜ்குமார் முன்னிலையில் இதுநாள் வரை நடந்து வந்தது.
ஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்!
இதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு 20 வருஷ தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. இப்போது, இந்த சம்பவத்தில் அடுத்த முக்கிய குற்றவாளி அந்த 16 வயது சிறுவன்தான் என்பது நிரூபணமாகி உள்ளது. இதையடுத்து நீதிபதி சிறுவனுக்கு 20 வருட கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
ஆனால் குற்றவாளி சிறுவன் என்பதால், அவனை உடனடியாக ஜெயிலுக்கு அனுப்ப முடியாது என்பதால், 21 வயது ஆகும் வரை சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் காவலில் வைக்கப்பட உள்ளான். அங்கேயே அவனுக்கு படிப்பு மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.