பெண்கள் திடீர் திடீர் மரணம்.. 6 தாத்தாக்கள் மீது சந்தேகம்.. பல்லை பிடுங்கி.. மலம்தின்ன வைத்த கொடூரம்
6 முதியவர்களின் பற்களை பிடுங்கிய 22 பெண்கள் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
பெர்ஷம்பூர்: திடீர் திடீர் என பெண்கள் மரணம் அடைந்துவிட்டனர்.. இது சம்பந்தமாக ஊர் மக்களுக்கு 6 தாத்தாக்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களின் பற்களை கொடூரமாக பிடுங்கி எறிந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் கோபாபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் போன 6 மாசத்தில் மட்டும் 3 பெண்கள் மர்மமான முறையில் இறந்துவிட்டனர். மேலும் 7 பேர் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டனர்.
திடீர் திடீர் என உயிரிழப்பு சம்பவங்கள் நடந்ததால், ஒட்டுமொத்த கிராமத்துக்கும் யாரோ சூனியம் வெச்சிட்டாங்க என்று ஊர் மக்கள் நினைத்தனர். இப்படி நினைத்ததுடன் மட்டும் இல்லாமல், அந்த கிராமத்தில் இருந்த 60 வயது தாத்தாக்கள் 6 பேர் மீது சந்தேகமும் வந்தது. அவர்கள்தான் ஏதோ மாய, மந்திரம் செய்து, இப்படி பெண்களை பலி வாங்கி விட்டதாக நினைத்தனர்.
இதற்காக ஒரு கூட்டத்தையும் ஊர் மக்கள் கூட்டினர். சந்தேகப்பட்ட 6 தாத்தாக்களின் பற்களையும் பிடுங்கிவிடலாம் என முடிவு செய்தனர். அதன்படி அந்த ஊர் மக்கள் குறிப்பாக பெண்கள், 6 தாத்தாக்களின் வீடுகளுக்கும் சென்று, அவர்களின் வயதைகூட கணக்கில் எடுத்து கொள்ளாமல், வெளியே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.
காட்டி கொடுத்த "ஒத்த செருப்பு".. 10 வயது சிறுமி நாசம்.. கல்குவாரியில் பிணம்.. சிக்கிய கொடூரன்!
பின்னர், அவர்களை கெட்டியாக பிடித்து கொண்டு, கற்களை வைத்து அவர்களின் வாயில் உள்ள பற்களை உடைக்க ஆரம்பித்தனர். சில பெண்கள், வீட்டு கிச்சனில் இருந்து இடுக்கிகளை கொண்டு வந்து, அதன்மூலம் பற்களை பிடுங்கினர்.
Odisha: 6 men allegedly made to eat human excreta&their teeth pulled out by a group of villagers in Gopapur, Khallikote, on suspicion of practicing witchcraft. SP Ganjam says, "29 people arrested. Patrolling intensified to nab the remaining accused&avert any untoward incidents." pic.twitter.com/VzkrzWQfhO
— ANI (@ANI) October 3, 2019
இப்படி கொடூரமாக நடந்து கொண்ட விவகாரத்தில், 6 முதியவர்களும் ஐயோ, அம்மா என வலியால் அலறினர். இது எல்லாவற்றிற்கும் மேலாக மனித மலத்தை கொண்டு வந்து அவர்களின் வாயில் திணித்துள்ளனர். விஷயம் போலீசுக்கு போனது. இதையடுத்து ஊர் மக்களிடம் இருந்து 6 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 22 பெண்கள் உள்பட 29 பேரை கைது செய்து, இப்போது ஜெயிலிலும் அடைத்துள்ளனர்.