For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குர்காவ்னில் 22 வயது நர்ஸை பலாத்காரம் செய்த கம்பவுண்டர், ஆம்புலன்ஸ் டிரைவர்

By Siva
Google Oneindia Tamil News

குர்காவ்ன்: குர்காவ்னில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22 வயது நர்ஸை கம்பவுண்டர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

குர்காவ்னில் உள்ள தனியார் மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வருபவர் அபய் ராம்(25). அதே மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரியும் 22 வயது பெண்ணை ராம் தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

22-year-old nurse gangraped in Gurgaon

நர்ஸ் வருவதற்குள் ராம் ஆம்புலன்ஸ் டிரைவரையும் தனது அறைக்கு வரவழைத்துள்ளார். நர்ஸ் வந்ததும் ராம் மற்றும் டிரைவர் ஆகியோர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆம்புலன்ஸ் டிரைவரை தேடி வருகிறார்கள்.

தனியார் மருத்துவமனையில் நர்ஸ் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A 22-year-old nurse at a private hospital here was gangraped by hospital staff, police said on Tuesday, adding one of the accused has been arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X