For Daily Alerts
Just In
செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் 25 தமிழர்கள் கைது
நெல்லூர்: ஆந்திர மாநிலத்தில், செம்மரம் வெட்டி கடத்தியதாக 25 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் செம்ரமம் வெட்டி கடத்துவதாக கூறி அவ்வப்போது போலீசாரால் தமிழகத்தை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்கவுண்டரில் பல தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், நெல்லூர் கதிரிநாயுடு வனப்பகுதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக இன்று ஆந்திர போலீசார் 25 தமிழ் கூலித் தொழிலாளிகளை கைது செய்துள்ளதோடு ரூ.48 லட்சம் மதிப்பிலான செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
In Andhra, 25 Tamils have been arrested for smuggling the red sandal tree.
Story first published: Thursday, June 15, 2017, 14:06 [IST]