For Daily Alerts
Just In
அங்கீகாரமற்ற 279 கல்வி நிறுவனங்களுக்கு ”நோட்டீஸ்”- ஸ்மிருதி இரானி தகவல்
டெல்லி: இந்தியாவில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 279 கல்வி நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் அவர், "நடப்பாண்டில் நாட்டின் பல்வேறு இடங்களில் 279 கல்வி நிலையங்கள் உரிய அங்கீகாரமின்றி நடத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
அந்த கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பான ஏஐசிடிஇ மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய அங்கீகாரம் பெற்று ஏ.ஐ.சி.டி.இ அமைப்பை அணுகுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டு வந்த 121 கல்வி நிலையங்கள் கடந்த நிதியாண்டில் (2014-15) மூடப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
Comments
English summary
279 educationla institutes closed for run without proper permission in India, Smriti irani.
Story first published: Friday, March 11, 2016, 9:48 [IST]