நாடே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு
நாடே மிகவும் எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி நாளை தீர்ப்பளிக்க உள்ளார்.
டெல்லி: நாடே மிகவும் எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி நாளை தீர்ப்பளிக்க உள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக திமுகவின் ஆ. ராசா பதவி வகித்த காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது சிபிஐ தொடர்ந்த வழக்குகள். இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி ஓ.பி. ஷைனி விசாரித்து வந்தார்.
இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி ஓ.பி. ஷைனி தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கு என்பது மற்ற ஊழல்களைப் போல அல்லாது டெக்னிக்கல் அம்சங்கள் நிறைந்ததும் கூட. இந்த வழக்கின் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.