For Daily Alerts
Just In
இமாச்சல பிரதேசத்தில் லேசான நில நடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு
ஷிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.5 ஆக பதிவானது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் குலு மாவட்டத்தில் நில அதிர்வு தெரிந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவானது. நேற்று இரவு 8.12 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வால் யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றிய உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
English summary
3.5 magnitude earthquake in Himachal Pradesh, mild tremors felt in Kullu and adjoining districts
Story first published: Friday, July 22, 2016, 1:58 [IST]