ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. நெல்லையை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உட்பட மூவர் வீர மரணம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் திங்கள்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் உட்பட, மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Recommended Video
குப்வாரா மாவட்டத்தின் கிரால்குண்ட் பகுதியில் உள்ள வாங்கம்-காசியாபாத்தில் சிபிஆர்எஃப் நாகா குழு மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில், மூன்று சிஆர்பிஎஃப் ஜவான்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, கூடுதல் படைகள் அங்கு விரைந்தன. மேலும் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 CRPF (Central Reserve Police Force) constables of 92 Battalion- Ashwani Kumar Yadav (from Ghazipur, UP), C Chandrasekar (from Tirunelveli, Tamil Nadu) and Santosh Kumar Mishra (from Aurangabad, Bihar) who lost their lives in the terrorist attack in Handwara (J&K), today. pic.twitter.com/J1a2CvCpi5
— ANI (@ANI) May 4, 2020
வீர மரணமடைந்ததில் ஒருவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதாகும் சந்திர சேகர் என தெரியவந்துள்ளது. திருமணமானவர். சிஆர்பிஎப் 92வது பட்டாலியனில் வேலை பார்த்து வந்தார்.
பிற இரு வீரர்களும், உத்தர பிரதேசம் மற்றும், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
2 பெண்களுக்கு கொரோனா.. பச்சை மண்டலம் அந்தஸ்தை இழந்தது கிருஷ்ணகிரி மாவட்டம்
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான, ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு இந்த தாக்குதலில் (TRF) ஈடுபட்டிருக்க கூடும் என்று சந்தேகம் நிலவுகிறது.