For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்முவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் பலி

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் பலியாகினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் அருகே உள்ள பதல் கிராமத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ராணுவ முகாம் அமைந்துள்ளது. அந்த முகாம் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர்.

3 GREF personnel killed in terror strike at Akhnoor, J&K

இந்த தாக்குதலில் 3 வீரர்கள் பலியாகினர். தீவிரவாதிகள் நேற்று இரவே பதல் கிராமத்திற்குள் நுழைந்து பதுங்கியிருந்து இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 வீரர்கள் பலியான முகாம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அனைத்து ராணுவ முகாம்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Three personnel of the General Reserve Engineering Force at Akhnoor in Jammu and Kashmir. Terrorist struck at the GREF camp at the Batal village near the Line of control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X