For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்… ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்கள் சுட்டுக்கொலை

Google Oneindia Tamil News

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப் படை வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் உள்ள 187 பட்டால் பாலியா ராணுவ முகாமில் நேற்று இரவு 10 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது

3 Jawans killed in the tragic clash between soldiers

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ராணுவ வீரர் அஜித்குமாருக்கும், சக வீரர்களான போக்ராமால், யோகேந்திர சர்மா, உமேத் சிங் ஆகிய 3 துணை ராணுவப் படை வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், ஆத்திரம் அடைந்த அஜித்குமார், துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதில் 3 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .

இதனை தொடர்ந்து, தன்னை தானே சுட்டுகொண்ட அஜித்குமார், கவலைக்கிடமான நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, மூத்த ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
J&K Camp: CRPF Constable Shoots Dead 3 Jawans After Altercation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X