For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. பயந்து பம்மிய ஒருவர் போலீசிடம் சரண்

Google Oneindia Tamil News

காஷ்மீர்: ஷோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம்( Kanigam) என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

3 Militants Killed in by Security Forces in J-Ks Shopian

பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி இருப்பதை கண்டறிந்த போலீஸார், அவர்களிடம் முடிந்தளவு பேசி சரணடைய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்க, இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும், தவுசிஃப் அகமது என்ற நபர் சரணடைந்தார். அவர் பயங்கரவாத குழுவில் புதிதாக இணைந்த நபர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
3 Militants Killed in J-K's Shopian - ஜம்மு காஷ்மீர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X