For Daily Alerts
Just In
கொச்சி அருகே மீன்பிடி படகு மீது கப்பல் மோதல்... 3 பேர் பலி
கொச்சி அருகே மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதில் 3 பேர் பலியாகிவிட்டனர்.
கன்னியாகுமரி: கொச்சி அருகே மீன்பிடிக்க சென்ற படகின் மீது கப்பல் மோதியதில் 3 பேர் பலியாகிவிட்டனர்.
குமரி மீனவர் யேசுபாலனுக்கு சொந்தமான படகில் 15 பேர் மீன்பிடிக்க நேற்று சென்றனர். அதில் 10 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 5 பேர் வடஇந்தியர்கள் ஆவர்.
இவர்கள் சென்ற படகு கொச்சி அருகே செல்லும் போது அங்கிருந்த கப்பல் ஒன்று பலமாக மோதியது. இதில் படகு கவிழ்ந்து 15 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர் .
இந்த விபத்தில் 3 மீனவர்கள் பலியாகிவிட்டனர். மேலும் 3 பேரை சக மீனவர்கள் கரை சேர்த்தனர். 10 மீனவர்கள் மாயமாகிவிட்டனர். மாயமான மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Comments
English summary
3 were died as ship hits boat near Kochi coastal. 15 were travelled in the boat which belongs to Kanyakumari fisherman.
Story first published: Tuesday, August 7, 2018, 11:59 [IST]