3 வயது பிஞ்சினை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு மனித மிருகம்- ஹரியானாவில் கொடூரம்!
பலாப்ஹர்க்: ஹரியானா மாநிலம், பாரிதாபாத்தில் 3 வயதான குழந்தை, பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்குழந்தையின் தாய் அளித்த புகாரில், பாரிதாபாத்தின் பலாப்ஹர்க் பகுதியில் அப்பெண், குழந்தையுடன் வசித்து வருவதாகவும், அவருடைய 3 வயதான குழந்தையிடம் அவரது பக்கத்து வீட்டுக்காரரான ராகுல் என்பவர் செப்டம்பர் 27 ஆம் தேதியன்று தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தையை தன்னுடைய வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்ற ராகுல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அக்குழந்தையை பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து மாடியில் குழந்தை அழும் சத்தம் கேட்டு மேலே சென்றுள்ளார் அப்பெண். அப்போது அக்குழந்தை அம்மனிதரின் செயல் பற்றி தாயிடம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு குறித்து மேலும் காவல்துறை அதிகாரி ராஜ்பாலா விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.