காஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி?
இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடத்திய தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video
ஸ்ரீநகர்: இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடத்திய தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் வருகிறது.
இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே காஷ்மீர் எல்லையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதை அடுத்து வரிசையாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 12 மணி நேரமாக இந்த தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய ஹோட்டல் வேண்டாம்.. கோபத்தில் கொந்தளித்த் டிரம்ப்.. அமெரிக்க அதிபருக்கு பெரும் சறுக்கல்!
சண்டை ஏன்?
பிஓகே எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியான டாங்தார் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் அமைத்துள்ளனர். இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதை முறியடிக்கும் பொருட்டு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
எப்படி
இந்த தாக்குதல் 4-5 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 தீவிரவாத முகாம்கள் அங்கு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டிரோன்கள் மூலம் இந்திய ராணுவம் இதை வேவு பார்த்து தாக்கி அழிக்க திட்டமிட்டுள்ளது.
பலி
இந்த ராணுவ தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியானதாக கூறப்படுகிறது. 5 முகாம்களில் இருந்த அனைத்து தீவிரவாதிகளும் பலியாகிவிட்டனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் எல்லோரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன தொடரும்
இந்த அதிரடி தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் தரப்பு, தற்போது இந்திய தூதரிடம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த தாக்குதல் நடந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி இருக்கிறது.